Logo

சேலம் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! - போலீசார் அதிரடி

சேலத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கதிர் வேல் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும், அவருடன் வந்த 3 ரவுடிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
 | 

சேலம் ரவுடி என்கவுண்டரில் சுட்டுக்கொலை! - போலீசார் அதிரடி

சேலத்தில் போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி கதிர் வேல் என்பவர் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். மேலும், அவருடன் வந்த 3 ரவுடிகள் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 

சேலத்தில் காரியப்பட்டி என்ற இடத்தில் பிரபல ரவுடி கதிர்வேல் இருப்பதை அறிந்த போலீசார் அவரை பிடிக்க முயன்றனர். அப்போது அவர் காவலர்களை தாக்கிவிட்டு தப்பித்து ஓடியதாகவும், இதனால் என்கவுண்டரில் போலீசார் அவரை சுட்டதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ரவுடி கதிர்வேல் மீது வழிப்பறி, கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த சில ஆண்டுகளாக தலைமறைவான ரவுடி கதிர்வேலை  போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் இன்று சுட்டுக்கொல்லப்பட்டார். 

தொடர்ந்து, கதிர்வேலின் உடல் சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அவருடன் இருந்த 3 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும் அரசு மருத்துவமனையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளதால் அப்பகுதி பரபரப்பான நிலையில் உள்ளது. 

சேலத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரே நாளில் 35 ரவுடிகள் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

 

 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP