கடும் பனிப்பொழிவு.. புத்தாண்டு வரை தொடரும் ரெட் அலர்ட்..
டெல்லி உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான குளிர் நிலவுவதால் அங்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Dec 29, 2019, 23:45 IST
| இந்தியாவின் வட மாநிலங்களில் தற்போது கடும் பனிப்பொழிவு காணப்படுகிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக டெல்லி, பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், பீகார் மற்றும் மத்தியப்பிரதேசத்தின் வடக்குப் பகுதியில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இந்த கடும் பனிப்பொழிவு புத்தாண்டு வரை தொடரும் எனவும் வானிலை ஆய்வும் மையம் தெரிவித்துள்ளது.
கடும் குளிர் மற்றும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, ரயில்களும் தாமதமாகவே செல்கின்றன. இதனால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
Newstm.in
newstm.in