இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது! ஜன.15ம் தேதி சபரிமலையில் வழங்கப்படுகிறது!
பிரபல இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
Dec 27, 2019, 19:51 IST
| ஒவ்வொரு வருடமும், சபரிமலை ஐயப்பன் புகழை பாடும் பாடகர்களுக்கு கேரள அரசு ஹரிவராசனம் எனும் விருது வழங்கி கௌரவித்து வருகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு சபரிமலை குறித்த மதநல்லிணக்கத்தையும், உலக சகோதரத்துவத்தையும் பாடல்களின் மூலமாக பரப்பிய இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு கேரள அரசு ஹரிவராசனம் விருது வழங்கவுள்ளதாக கேரள அரசு அறிவித்திருந்தது.
இதையடுத்து, இன்று சபரிமலையில், இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது. இந்த விருதுடன் ரூ.1 லட்சம் பரிசுத் தொகையும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Newstm.in
newstm.in