பசுமை நுகர்வோர் கடையில் மிக குறைந்த விலையில் வெங்காய விற்பனை!!
கடந்த சில நாட்களாக வெங்காய விலை உயர்ந்து காணப்பட்ட நிலையில், பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது மிக குறைந்த விலையில் வெங்காயங்கள் விற்பனைக்கு வந்துள்ளன.
கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை, உயர்வை சந்தித்து வந்த நிலையில்,அதனை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது மத்திய அரசு. இதனை தொடர்ந்து, வெளிச்சந்தைகளில் விற்கபடும் விலையை விட குறைவாக ரூ.30 , ரூ. 40 என்ற ரீதியில் பசுமை நுகர்வோர் கடைகளில் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது வெங்காயம்.
இந்த விலை குறைப்பை தொடர்ந்து, அரசின் நடவடிக்கையால் மிக விரைவில் வெங்காய விலை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று அமைச்சர்களான செல்லூர் ராஜூ மற்றும் காமராஜ் இருவரும் தகவலளித்துள்ளனர்.
Newstm.in
newstm.in