டிராக்டர் மோதி தந்தை, மகன் உயிரிழந்த சோகம்
அரக்கோணம் அருகே இன்று டிராக்டர் மோதி நடந்து சென்றுக்கொண்டிருந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
May 18, 2019, 21:15 IST
| அரக்கோணம் அருகே இன்று டிராக்டர் மோதி நடந்து சென்றுக்கொண்டிருந்த தந்தை, மகன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
வேலூர் மாவட்டம் அரக்கோணம் அடுத்த பள்ளூர் கிராமத்தில் சாலையில் நடந்து சென்றுக்கொண்டிருந்த தந்தை, மகன் மீது மணல் ஏற்றிக்கொண்டு வேகமாக சென்ற டிராக்டர் மோதி விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் தந்தை ரஜினி, மகன் தினேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதையடுத்து, விபத்தில் உயிரிழந்த ரஜினி மற்றும் தினேஷின் உடல்களுடன் இழப்பீடு கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in