சென்னை தலைமை செயலகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
May 20, 2019, 22:39 IST
| சென்னை தலைமை செயலகத்துக்கு மர்ம நபர்கள் வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் உள்ள தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அலுவலகத்தில் தேர்தல் அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது, குண்டு வ்டிக்கும் என மொட்டைக் கடிதம் வந்துள்ளது. இதனால் அங்கிருந்தவர்கள் பதற்றம் அடைந்தனர்.
இதையடுத்து, தலைமை செயலகத்தை சுற்றிலும் போலீஸ் குவிக்கப்பட்டு, மோப்ப நாய்கள் உதவியுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
newstm.in
newstm.in