நீர்நிலைகளை பாதுகாக்க கோடி கணக்கில் நிதிஒதுக்கீடு... ஆனால் நடப்பது.. நீங்களே பாருங்க அந்த கொடுமையை..
நீர்நிலைகளை பாதுகாக்கவும், தூர்வாரவும் கோடி கணக்கில் நிதி ஒதுக்கும் தமிழ்நாடு... ஆனால் அரசு ஊழியர்களின் அலட்சியங்களினால் நீர்நிலைகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள ஏரி, குளம், ஆறு, கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை பாதுகாக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக கோடி கணக்கில் நிதி ஒதுக்கப்பட்டு தூர்வாரும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இது ஒரு புறம் நடக்க மற்றொரு புறம் என்ன நடக்கிறது என்பதை கண்டு மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். கடலூர் கார்ப்பரேஷன் மூலம் சேகரிக்கப்பட்ட டன் கணக்கான குப்பைகளை லாரி லாரியாக கொண்டு வந்து ஆற்றில் கொட்டப்படுவதாக குறிப்பிட்டு ஒரு வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Newstm.in
newstm.in