அமித் ஷா சென்னை வருகிறார்! - தமிழிசை தகவல்
நாடாளுமன்றத் தேர்தலுக்காக , அடுத்த மாதம் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை வர இருப்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
Jun 11, 2018, 13:24 IST
| நாடாளுமன்றத் தேர்தலுக்காக , அடுத்த மாதம் பா.ஜ.க தேசியத் தலைவர் அமித் ஷா சென்னை வர இருப்பதாக தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தகவல் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத் தேர்தல் 2019ம் ஆண்டு மே மாதம் நடைபெற உள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் அரசியல் பணிகளைத் தொடங்கியுள்ளன. இதையடுத்து தேர்தல் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர்களுடன் ஆலோசனை நடத்தவும், தமிழகத்தில் பா.ஜ.கவை பலப்படுத்தவும் அமித் ஷா சென்னை வர இருப்பதாக தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். வருகிற ஜூலை முதல் வாரம் அவர் சென்னை வர இருப்பதாக அவர் கூறியுள்ளார். கடந்த மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டசபை தேர்தலில் திட்டமிட்டபடி, ஆட்சியை பிடிக்காவிட்டாலும், அதிக அளவில் இடங்களை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.
newstm.in