மதுரை தொகுதி வேட்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு!
தேர்தல் செலவினங்களை முறையாக தாக்கல் செய்யாத மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
Apr 16, 2019, 16:40 IST
| தேர்தல் செலவினங்களை முறையாக தாக்கல் செய்யாத மதுரை மக்களவைத் தொகுதி வேட்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது தேர்தல் செலவினக் கணக்குகளை, அவ்வப்போது தேர்தல் அதிகாரியிடம் தாக்கல் செய்ய வேண்டியது சட்டப்பூர்வமானதாகும்.
தமிழகத்தில் நாளை மறுதினம்(ஏப்.18) தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் செலவு கணக்குகளை முறையாக காட்டாத மதுரை தொகுதி சுயேச்சை வேட்பாளர்கள் 5 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
newstm.in
newstm.in