சேலம்: உயிர் பலிவாங்க காத்துக்கிடக்கும் மேம்பால குழிகள்
மகுடஞ்சாவடி அருகே ஆ.தாழையூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பால நடைபாதையில் எந்நேரமும் உயிர் பலிவாங்க காத்துக் காத்துக்கிடக்கும் இரண்டு பெரிய குழிகள் உள்ளது.
Sep 28, 2019, 16:31 IST
| மகுடஞ்சாவடி அருகே ஆ.தாழையூர் தேசிய நெடுஞ்சாலை மேம்பால நடைபாதையில் எந்நேரமும் உயிர் பலிவாங்க காத்துக் காத்துக்கிடக்கும் இரண்டு பெரிய குழிகள் உள்ளது.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடி அருகே உள்ள ஆ.தாழையூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை மேம்பால நடைபாதையில் இரண்டு பெரிய குழிகள் ஏற்பட்டுள்ளது. சங்ககிரி- சேலம் செல்லும் வழியில் இந்த மேம்பாலம் உள்ளது. பாலத்தின் அடியில் சேலம்-ஈரோடு ரயில்வே பாதை உள்ளது. இதன் மேலே இந்த குழியானது எந்நேரத்திலும் உயிர்பலி வாங்க காத்துள்ளது.
இதனை தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் உடனடியாக சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்களும் , பாதசாரிகளும் வலியுறுத்தியுள்ளனர்.
newstm.in
newstm.in