பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு ஜாமீன் மனு தள்ளுபடி
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள திருநாவுக்கரசின் ஜாமீன் மனுவை பொள்ளாச்சி நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
பொள்ளாச்சியில் மாணவிகளிடம் நட்பாக பழகி விடியோ எடுத்து மிரட்டி, பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் திருநாவுக்கரசு என்ற இளைஞர் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், திருநாவுக்கரசுக்கு ஜாமீன் வழங்கக் கோரி அவரது தாயார், பொள்ளாச்சி நடுவர் முதலாவது நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, திருநாவுக்கரசிடம் இருந்து கைப்பற்றப்பட்ட செல்போன் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், இந்த வழக்கு சம்பந்தமாக மேலும் விசாரணை நடத்த வேண்டும் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவருக்கு ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்.
பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் யாரும் இந்த வழக்கில் வாதாட மாட்டோம் என, பொள்ளாச்சி வழக்கறிஞர்கள் ஏற்கெனவே கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in