Logo

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி உட்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 

திருச்சி விமான நிலையத்தில் இருவரிடம் இருந்து 20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி, லேப்டாப் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
 | 

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி உட்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 

திருச்சி விமான நிலையத்தில் இருவரிடம்  இருந்து  20 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி, லேப்டாப் மற்றும் தங்கம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருச்சியிலிருந்து கோலாலம்பூர் செல்லவிருந்த ஏர் ஏசியா விமானத்தில் பயணம் செய்ய உள்ள பயணிகளின் உடைமைகளை விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தபோது இளையான்குடியைச் சேர்ந்த ஆசாத் என்பவர் மறைத்து எடுத்து வந்த 3 லட்சத்து 84 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சி பறிமுதல் செய்யப்பட்டது.

திருச்சி விமான நிலையத்தில் வெளிநாட்டு கரன்சி உட்பட பல லட்சம் மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் 

மேலும்  இளையான்குடியைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவர் மறைத்து வைத்து எடுத்து வந்த ரூபாய் 15 லட்சத்து 30 ஆயிரம் மதிப்புள்ள 402 கிராம் தங்கம் மற்றும்  அவரிடமிருந்து 1,52,000 ரூபாய் மதிப்புள்ள 8 லேப்டாப் , 300 பிளாஸ்டிக் வாட்சுகள் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP