மதுரை: சிம்மக்கல் கல் பாலத்தில் வாகனங்கள் செல்லத் தடை!
மதுரை வைகையாற்றில் அதிகளவு நீர் செல்வதால் சிம்மக்கல் அருகே உள்ள கல் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Nov 10, 2019, 22:20 IST
| மதுரை வைகையாற்றில் அதிகளவு நீர் செல்வதால் சிம்மக்கல் அருகே உள்ள கல் பாலத்தில் வாகனங்கள் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை எதிர்பார்த்த அளவை விட அதிகம் பெய்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு அணைகள் நிரம்பியுள்ளன. வைகை அணை நிரம்பியுள்ளதையடுத்து, அணையில் இருந்து வைகை ஆற்றில் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. இதனால் மதுரை வைகை ஆற்றில் அதிகளவு நீர் கரைபுரண்டு செல்கிறது. இந்நிலையில், சிம்மக்கல் அருகே ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கல் பாலம் நீரில் மூழ்கியதால் அப்பகுதியில் போக்குவரத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
Newstm.in
newstm.in