ராமேஸ்வரம் தீவில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது: உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு
ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
Nov 26, 2019, 03:30 IST
| ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் டாஸ்மாக் கடை திறக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
புண்ணிய தலமான ராமேஸ்வரத்தில் டாஸ்மாக் கடை திறந்தால் அமைதி சீர்குலையும் என்று, ராமமூர்த்தி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கை முடித்துவைத்தது.
newstm.in
newstm.in