மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆனார் மன்மோகன் சிங்!
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபா எம்பியாக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங் 1991 முதல் 2019 ஜூன் வரை, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டு எம்.பி.,யாக பதவி வகித்தார். அவரின் பதவி காலம் நிறைவடைந்ததை அடுத்து வேறு மானினத்திலிருந்து அவரை எம்பி ஆக்குவதற்கான முயற்சிகள் நடந்தன.
இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த பாஜக எம்பி மதன் லால் சைனி காலமானதை அடுத்து, அங்கு ராஜ்யசபா எம்பிக்கள் தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சியின் சார்பில், மன்மோகன் சிங் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். அவருக்கு போட்டியாக பாஜக யாரையும் களம் இருக்கது என அறிவித்ததை அடுத்து அவர் போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாக தேர்வானார்.
அந்த மாநிலத்தின் 25 லோக்சபா எம்பிக்கள் மற்றும் 9 ராஜ்யசபா எம்பிக்கள் அனைவரும் பாஜகவினர் என்ற நிலையில் மன்மோகன் சிங் மட்டுமே ஒரே ஒரு காங்கிரஸ் எம்பி என்பது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in