யோகி ஆதித்யநாத்துக்கு லேப்டாப் பயன்படுத்த தெரியாது - அகிலேஷ் யாதவ்
உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது இலவச லேப்டாப் திட்டம் செயல்படுத்தப்பட்டதாக அகிலேஷ் யாதவ் குறிப்பிட்டார். ஆனால், தற்போதைய முதல்வர் யோகிக்கு அதை எப்படி பயன்படுத்துவது என்பதே தெரியாது என்றார் அவர்.
May 1, 2019, 23:59 IST
| உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கு லேப்டாப் கூட பயன்படுத்த தெரியாது என்று முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவருமான அகிலேஷ் யாதவ் விமர்சித்தார்.
மக்களவைத் தேர்தலை முன்னிட்டு லக்னௌவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் அகிலேஷ் யாதவ் உரையாற்றினார். உத்தரப் பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி ஆட்சியில் இருந்தபோது இளைஞர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கப்பட்டதை அவர் சுட்டிக்காட்டினார். ஆனால், தற்போதைய பாஜக முதல்வர் யோகிக்கு, லேப்டாப்பை எப்படி பயன்படுத்துவது என்பதே தெரியாது என்றும், அதனால்தான் இலவச லேப்டாப் திட்டத்தை அவர் செயல்படுத்தவில்லை என்றும் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
newstm.in
newstm.in