தேர்தல் கமிஷன் செயல்பாட்டில் நம்பிக்கையில்லை: சந்திரபாபு நாயுடு
தேர்தல் கமிஷன் அதிகாரிகள், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். அவர்கள் நடுநிலையோடு பணியாற்றவில்லை என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியுள்ளார்.
Apr 15, 2019, 01:37 IST
| தேர்தல் கமிஷன் அதிகாரிகள், பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றனர். அவர்கள் நடுநிலையோடு பணியாற்றவில்லை என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியுள்ளார்.
ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடு செய்தியாளர்களிடம் பேசியதாவது: :தேர்தல் கமிஷனின் செயல்பாடுகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை. பா.ஜ.,வின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேர்தல் கமிஷன் அதிகாரிகள், ஓட்டு இயந்திரத்தில் முறைகேடு செய்ய வாய்ப்புள்ளது. இந்த குற்றச்சாட்டை நாங்கள் ஆரம்பம் முதலே கூறி வருகிறோம்" என்றார்.
newstm.in
newstm.in