‛அயோத்தி பிரச்சனை முக்கியம் கிடையாது’
‛‛வரும் லோக்சபா தேர்தலில், அயோத்தி பிரச்சனை முக்கியத்துவம் பெறாது,’’ என, காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
Jan 4, 2019, 20:50 IST
| ‛‛வரும் லோக்சபா தேர்தலில், அயோத்தி பிரச்சனை முக்கியத்துவம் பெறாது,’’ என, காங்கிரஸ் தலைவர் ராகுல் கருத்து தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற வளாகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை), செய்தியாளர்களிடம், ராகுல் பேசியதாவது: வரும் லோ க்சபா தேர்தலில், மக்கள் பிரச்னைகளை முன்னிறுத்தி பிரசாரம் செய்வோம். கல்வி, வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் ஊழல் ஒழிப்பு உள்ளிட்டவை தான் மக்கள் மத்தியில் பேசப்படும். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது குறித்த பிரச்னை, இந்த தேர்தலில் முக்கிய பிரச்சனையாக இருக்காது. அது முக்கியத்துவம் பெறாது. இவ்வாறு அவர் பேசினார்.
newstm.in