திருப்பதியில் லட்டு விலை உயர்வு
இலவச, திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு சலுகை விலை லட்டு வழங்குவது நிறுத்தப்பட்டு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Nov 16, 2019, 12:30 IST
| இலவச, திவ்ய தரிசனத்தில் செல்லும் பக்தர்களுக்கு சலுகை விலை லட்டு வழங்குவது நிறுத்தப்பட்டு ஒரு லட்டு ரூ.50-க்கு விற்க திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
திருப்பதியில் சாமி தரிசனம் செய்யும் பக்தர்களுக்கு ஒரு லட்டு இலவசமாக வழங்கப்படும் என்றும், ரூ.50-க்கு விற்கப்படும் லட்டு எத்தனை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளலாம் என்றும் தெரிவித்த தேவஸ்தானம், சலுகை விலையில் லட்டு வழங்குவதால் திருப்பதி தேவஸ்தானத்துக்கு ஆண்டுக்கு ரூ.200 கோடி இழப்பு ஏற்படுகிறது என்று தெரிவித்துள்ளது.
மேலும், இந்த லட்டு விலை உயர்வு விரைவில் அமலுக்கு வரும் என்று திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
newstm.in
newstm.in