ஜம்மு காஷ்மீரில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவு!
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகி உள்ளது. இந்த அதிகாரப்பூர்வ தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
Aug 14, 2019, 00:56 IST
| ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இன்று மாலை 4.30 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 4.2 என பதிவாகி உள்ளது.
இந்த அதிகாரப்பூர்வ தகவலை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. மேலும், நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் இதுவரை எதுவும் வெளியாகவில்லை.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, கடந்த வாரம் அங்கு 144 தடை உத்தரவு மற்றும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பே இந்த கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்புநிலைக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
newstm.in
newstm.in