தாஜ்மஹாலை இரவிலும் திறந்து வைக்க மத்திய அரசு திட்டம்
உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் பார்வையாளர்களுக்கு திறந்து வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
Aug 30, 2019, 13:30 IST
| உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மஹாலை, வழக்கமான நேரத்தை விட கூடுதல் நேரம் பார்வையாளர்களுக்கு திறந்து வைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து மத்திய சுற்றுலா துறை அமைச்சர் ப்ரஹலாத் படேல் கூறியதாவது:"தாஜ்மஹாலை காண உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பலர் வருகின்றனர். இதை வழக்கமான நேரமான காலை 10 முதல் மாலை 6 மணி வரை திறந்து வைப்பதுடன், கூடுதல் நேரம் திறந்து வைக்க வேண்டும் என பல தரப்பிலும் கோரிக்கை எழுந்துள்ளது.
இதனால், மாலை நேரத்திற்குப் பின், இரவு நேரங்களிலும் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து ஆலோசித்து வருகிறோம். இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
newstm.in
newstm.in