இதற்கு கூடவா ஒரு முன்னாள் முதல்வர் எதிர்ப்பு தெரிவிப்பார்?!
பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி, ஜமாத் -ஏ - இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஜம்மு -காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சி (பிடிபி) தலைவருமான மெகபூபா முஃப்தி தலைமையில், அக்கட்சியினர் தலைநகர் ஸ்ரீநகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஜம்மு -காஷ்மீரில் செயல்பட்டு வந்த ஜமாத் -ஏ- இஸ்லாமி என்ற அமைப்பு, பல்வேறு பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு வரும் அமைப்புகளுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகக் கூறி, அந்த அமைப்புக்கு தடைவிதிக்கப்படுவதாக, மத்திய அரசு வியாழக்கிழமை அறிவித்தது.
அதனையடுத்து, ஸ்ரீநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள ஜமாத் -ஏ -இஸ்லாமி அமைப்பின் அலுவலகங்களுக்கு இன்று சீல் வைக்கப்பட்டது.
இந்த நிலையில், ஒடுக்குமுறையை கையாளும் நோக்கத்துடன் ஜமாத் -ஏ -இஸ்லாமி அமைப்புக்கு மத்திய அரசு தடைவிதித்துள்ளது எனக் கூறி, மெகபூபா முஃப்தி தலைமையில் பிடிபி கட்சியினர், மாநிலத் தலைநகரான ஸ்ரீநகரில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
முன்னதாக, மெகபூபா முஃப்தி நேற்று வெளியிட்ட ட்விட்டர் பதிவில், " கருத்து மோதல்களின் களம்தான் ஜனநாயகம். காஷ்மீரில் நிலவிவரும் அரசியல் சூழ்நிலையை மத்திய அரசு எவ்வாறு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குகிறது என்பதற்கு இந்தத் தடை ஒரு உதாரணம்" என அவர் தெரிவித்திருந்தார்.
newstm.in
newstm.in