Logo

உத்தரப்பிரதேசம்: ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன; 5 பேர் படுகாயம் !

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் டெல்லி செல்லும் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
 | 

உத்தரப்பிரதேசம்: ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டன; 5 பேர் படுகாயம் !

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் டெல்லி செல்லும் ரயிலின் 10 பெட்டிகள் தடம் புரண்டது. இந்த  விபத்தில் படுகாயமடைந்த 5 பேருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 

கொல்கத்தாவின் ஹவுர நகரில் இருந்து புதுடெல்லி நோக்கி சென்ற விரைவு ரெயிலான பூர்வா எக்ஸ்பிரஸ் உத்தரப்பிரதேசம் கான்பூரை இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை ஒரு மணியளவில் அடைந்தது.  அப்போது ரெயிலின் 10 பெட்டிகள் திடீரென தடம் புரண்டன.  தகவலறிந்து வந்த மீட்புக்குழுவினர் காயமடைந்த 5 பயணிகளை பத்திரமாக மீட்டு முதலுதவி சிகிச்சை அளித்தனர். ரயில் தடம் புரண்டதற்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP