Logo

கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.
 | 

கர்நாடகாவில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் பலி

கர்நாடக மாநிலத்தில் லாரிகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர்.

கர்நாடக மாநிலம் சிவமோகா அருகே எரிவாயு சிலிண்டர்களை ஏற்றிய லாரி சகாரா தாலூகா அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது கட்டுமான பொருட்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று எதிர்திசையில் வந்து கொண்டிருந்தது.

அப்போது கண்ணிமைக்கும் நேரத்தில் இரண்டு லாரிகளும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக்கொண்டன. இந்த விபத்தில் லாரிகளில் இருந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இந்த சம்பவம் குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவரை மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தால் அப்பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP