இதுவொரு கைத்தறி நெசவாளனின் ஆசை !
ஆந்திரம் மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்துக்குட்பட்ட அச்சன்தா மண்டல் பகுதியை சேர்ந்தவர் ருத்ராக்ஷலா ராமலிங்கா சத்யநாராயணா. கைத்தறி நெசவாளரான இவர், ஓர் முழுநீள மூவர்ண தேசியக் கொடியை தன் கைப்பட நெய்துள்ளார்.
Apr 30, 2019, 04:20 IST
| ஆந்திரம் மாநிலம், மேற்கு கோதாவரி மாவட்டத்துக்குட்பட்ட அச்சன்தா மண்டல் பகுதியை சேர்ந்தவர் ருத்ராக்ஷலா ராமலிங்கா சத்யநாராயணா. கைத்தறி நெசவாளரான இவர், ஓர் முழுநீள மூவர்ண தேசியக் கொடியை தன் கைப்பட நெய்துள்ளார்.
ஓரிடத்தில்கூட எந்தவொரு இணைப்பும், தையலும் கிடையாது என்பதுதான் இவர் வடிவமைத்துள்ள தேசியக் கொடியின் தனிச்சிறப்பு.
தான் நெசவு செய்து வடிவமைத்துள்ள தேசியக்கொடி, வரும் சுதந்திர தினத்தன்று டெல்லி செங்கோட்டையில், பிரதமரின் கையால் ஏற்றப்பட்டு பட்டொளி வீசி பறக்க வேண்டும் என்பதுதான் தமது ஆசையென சத்யநாராயணா தெரிவித்துள்ளார்.
newstm.in
newstm.in