தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் : உளவுத்துறை எச்சரிக்கை
ஐம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விமானப்படை தளங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
May 17, 2019, 17:18 IST
| ஐம்மு - காஷ்மீர் மாநிலத்தில் உள்ள விமானப்படை தளங்களில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என உளவுத்துறை எச்சரித்துள்ளது.
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுவத்தினரும், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்துமீறி, இந்திய எல்லையோர கிராமங்கள் மற்றும் இந்திய நிலைகள் மீது அதிரடி தாக்குதல்கள் நடத்தி வருவது தொடர் நிகழ்வாக உள்ளது.
இந்நிலையில், ஸ்ரீநகர் மற்றும் அவந்திபுரா விமானப் படை தளங்களில் தீவிரவாதிகள் அதிரடி தாக்குதல் நடத்தக்கூடும் என மத்திய உளவுத் துறை எச்சரித்துள்ளது. இதையடுத்து அப்பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
newstm.in
newstm.in