மும்பை- போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்
மும்பையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏழாம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
Jan 14, 2019, 19:15 IST
| மும்பையில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் தொடர்ந்து ஏழாம் நாளாக வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் பேருந்துப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
மும்பை மாநகரில் பெஸ்ட் எனும் அமைப்பின் சார்பில் அரசு போக்குவரத்து நடைபெறுகிறது. இந்த நிறுவனத்தின் தொழிலாளர்கள், ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 7 வது நாளாக இன்றும் வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர். பயணிகள் ஆட்டோ, டாக்சி ஆகியவற்றில் அதிக கட்டணம் கொடுத்து செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. புறநகர் ரயில்களில் வழக்கத்தை விட பயணிகள் கூட்டம் அதிகரித்துள்ளது.
newstm.in
newstm.in