இரவு எட்டு மணிக்கு மேல் மது விற்கக்கூடாது: முதல்வர் உத்தரவு
ராஜஸ்தானில் இனி இரவு எட்டு மணிக்கு மேல் மதுவை விற்பனை செய்யக்கூடாது என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக மது கடத்தலில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அவர் கூறியுள்ளார்.
Jan 20, 2019, 16:55 IST
| ராஜஸ்தானில் இனி இரவு எட்டு மணிக்கு மேல் மதுவை விற்பனை செய்யக்கூடாது என்று அந்த மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
சமுதாயத்தின் நலன்கருதி பிறக்கப்பட்டுள்ள இந்த உத்தரவை மீறி, மது விற்பனை செய்யப்பட்டால், சம்பந்தப்பட்ட கடைகளின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதிக்கப்படும் என்பதுடன், அந்த கடைகளுக்கு சீல் வைக்கப்படுவதுடன், அவற்றுக்கான உரிமமும் ரத்து செய்யப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
அதிகபட்ச சில்லரை விற்பனை விலைக்கும் கூடுதலாக மது விற்பவர்கள் மீதும், மாநிலத்தில் சட்டவிரோதமாக மது கடத்தலில் ஈடுபடுவோர் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் அதிகாரிகளுக்கு முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.
newstm.in
newstm.in