Logo

கும்பமேளா- 3 கோடி பேர் புனித நீராடல்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் சாஹி ஸ்நான் எனப்படும் புனித நீராடுதலில் இன்று 3 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடினர்.
 | 

கும்பமேளா- 3 கோடி பேர் புனித நீராடல்!

உத்தரப்பிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் நடைபெற்று வரும் கும்பமேளாவில் "சாஹி ஸ்நான்" எனப்படும் புனித நீராடுதலில் இன்று 3 கோடி பேர் கலந்து கொண்டு புனித நீராடினர்.

பிரயாக்ராஜ் நகரில், புனித நீராடலுடன் அர்த்த கும்பமேளா திருவிழா ஜனவரி 15ஆம் தேதி கோலாகலமாக தொடங்கியது. நாட்டின் பல பகுதிகளில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்களும், சாதுக்களும் அங்கு திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர். 

மூன்று நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடிவதே புண்ணியம் இதனால் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும் என்கின்றனர் சாதுக்ககள். கும்பமேளாவில் உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் இருந்து, 16 கோடிக்கும் மேற்பட்ட மக்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

பக்தர்கள் தங்குவதற்கு தற்காலிகக் குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் வி.ஐ.பிக்கள், முக்கியப் பிரமுகர்கள் தங்குவதற்கு வசதியாக 4,000 சொகுசு குடில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இன்று சரஸ்வதி தேவி பிறந்த நாளை வசந்த பஞ்சமி என கொண்டாடப்படுகிறது. இதையோட்டி சாஹி ஸ்நான் எனும் புனித நீராடுதலில் உள்நாடு மற்றும் வெளிநாட்டு பக்தர்கள் சுமார் 3 கோடி பேர் திரிவேணி சங்கமத்தில் நீராடினர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP