காஷ்மீர்- எல்லையில் முகாம்களை மூடிய பயங்கரவாதிகள்
இந்திய ராணுவம் எந்த நேரம் வேண்டுமானால் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலையடுத்து பயங்கரவாத அமைப்புகள் தங்கள் முகாம்களை மூடியுள்ளனர்.
Mar 28, 2019, 19:50 IST
| இந்திய ராணுவம் எந்த நேரம் வேண்டுமானால் தாக்குதல் நடத்தலாம் என்ற தகவலையடுத்து பயங்கரவாத அமைப்புகள் தங்கள் முகாம்களை மூடியுள்ளனர்.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில், லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ்ரீ முகமது, இஸ்புல் முஜாகிதின், ஐஎஸ் போன்ற பயங்கரவாத அமைப்புகள் தங்கள் முகாம்களை அமைத்துள்ளன.
புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
இந்நிலையில் இந்திய ராணுவம் மீண்டும் ஒரு தாக்குதல் நடத்தப்போவதாக பயங்கரவாத அமைப்புகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததையடுத்து அப்பகுதியில் செயல்பட்டு வந்த மேலும் சில முகாம்களை மூடியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
newstm.in
newstm.in