ஜம்மு-காஷ்மீர்- மணல் லாரி கவிழ்ந்து 2 பேர் பலி
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லாரி ஒன்று நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
May 21, 2019, 00:04 IST
| ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் லாரி ஒன்று நிலை தடுமாறி பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில் இரண்டு பேர் உயிரிழந்தனர்.
ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில் கோஹா மர்மத் என்ற இடத்தில் மணல் ஏற்றி கொண்டு மகோட்டா என்ற கிராமத்திற்கு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையோரம் இருந்த பெரிய பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 2 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
newstm.in
newstm.in