ஜம்மு காஷ்மீர்- தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் பயங்கர துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பாகிஸ்தான் ராணுத்தினரும் பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளும் அத்து மீறி எல்லையோர கிராமங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இதற்கு இந்திய தரப்பிலும் தக்க பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபுரா பகுதியில் இன்று காலை தீவிரவாதிகள் இந்திய நிலைகள் மீது துப்பாக்கி சூடு நடத்தினர்.
பதிலுக்கு இந்திய ராணுவத்தினரும் தீவிரவாதிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருகின்றனர். இந்த துப்பாக்கி சண்டையில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்து உடனடியாக தகவல் வெளியாகவில்லை. துப்பாக்கி சண்டையால் அப்பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
newstm.in