கர்நாடகா கனமழை: பலி எண்ணிக்கை 12 ஆக உயர்வு
கர்நாடகாவில் மீண்டும் தொடங்கிய கனமழையால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Oct 23, 2019, 15:02 IST
| கர்நாடகாவில் மீண்டும் தொடங்கிய கனமழையால் 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
கர்நாடகாவில் கடந்த மாதம் பெய்த தொடர் மழை காரணமாக பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன. அதில் இருந்து இன்னும் மீண்டு வராத நிலையில், தற்போது வடக்கு கர்நாடகாவில் மீண்டும் கனமழை தொடங்கியுள்ளது. ஹாவேரி, பெலகாவி, பாகல்கோட்டை உள்ளிட்ட 12 மாவட்டங்களில் நேற்றிரவு முதல் விடியவிடிய கனமழை பெய்துள்ளது. வடக்கு கர்நாடகாவில் கனமழை காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 100க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
Newstm.in
newstm.in