பீகாரில் தொடரும் கனமழை : வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!
பீகாரில் இன்னும் 24 மணி நேரத்திற்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அம்மாநில மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது
Sep 30, 2019, 17:50 IST
| பீகாரில் இன்னும் 24 மணி நேரத்திற்கு கன மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால் அம்மாநில மக்களின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது.
பீகார் மாநிலம் பாட்னாவில் கடந்த சில நாட்களாக விடாமல் பெய்து வரும் கனமழையால் நகரத்தின் பல் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் பீகாரின் வசிக்கும் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்வதாரத்தை இழந்துள்ளனர்.
இந்நிலையில் வானிலை மையத்தின் முன்னறிவிப்பின்படி, குறைந்தது ஒரு நாளாவது மழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வரும் செவ்வாய் கிழமை வரை பாட்னாவில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
newstm.in
newstm.in