போதை பொருள் கடத்தி வந்த நைஜீரியர்கள் 4 பேர் கைது
கோகைகன் போதை பொருளை கடத்தி வந்ததாக நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
May 20, 2019, 23:15 IST
| கோகைகன் போதை பொருளை கடத்தி வந்ததாக நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர்.
மும்பை கோரேகன் பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வேகமாக வந்த காரை போலீசார் வழிமறித்து நிறுத்தினர்.
காரில் பயணம் செய்த நைஜீரிய நாட்டை சேர்ந்த 4 பேரை சந்தேகத்தின் பேரில் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர்கள் தடை செய்யப்பட்ட கோகைன் போதை பொருட்கள் வைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 40 கிராம் எடையுள்ள இரண்டரை லட்சம் மதிப்புள்ள கோகைன் போதை பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
newstm.in
newstm.in