Logo

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
 | 

தீ விபத்து: ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பலி

உத்தரப்பிரதேச மாநிலத்தில் மின் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில், மாயாவதி காலனியில் உள்ள ஒரு வீட்டில், நேற்று நள்ளிரவு திடீரென மின்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால், அங்கு தீ பரவி அருகில் இருந்த எரிவாயு கிடங்குக்கும் பரவியுள்ளது.

அங்கிருந்த எரிவாயு சிலிண்டர்கள் வெடித்ததால், தீ வேகமாக பரவியது.  இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு படையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.

இந்த தீ விபத்தில், அந்த வீட்டில் இருந்த 5 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP