ஆந்திர பிரதேசம்- போலீசாருக்கு இன்று முதல் வார விடுமுறை
ஆந்திர பிரதேச மாநிலத்தில் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை இன்று முதல் வார விடுமுறை நடைமுறை படுத்தப்படுகிறது.
Jun 19, 2019, 17:00 IST
| ஆந்திர பிரதேச மாநிலத்தில் கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை இன்று முதல் வார விடுமுறை நடைமுறை படுத்தப்படுகிறது.
வைஎஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி தனது தேர்தல் பிரசாரத்தில் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் காவல் துறைக்கு வார விடுமுறை வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
அதன்படி முதல்வராக பொறுப்பேற்ற ஒரு வாரத்தில் காவல் துறைக்கு வார விடுமுறை நடைமுறையை அறிவித்துள்ளார்.
அதன்படி ஆந்திர மாநிலத்தில் உள்ள கான்ஸ்டபிள் முதல் இன்ஸ்பெக்டர் வரை அனைவருக்கும் வார விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று முதல் அது அமலுக்கு வருகிறது. இதனால் காவல் துறையை சேர்ந்தவர்கள் மிகுந்த மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
newstm.in
newstm.in