Logo

தலைநகரில் விமானம், ரயில் சேவை கடும் பாதிப்பு!

டெல்லியில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, அங்கு விமானம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.காலை 5:30 மணி முதல் 7 மணி வரைக்குள்ளான விமானங்களின் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
 | 

தலைநகரில் விமானம், ரயில் சேவை கடும் பாதிப்பு!

தலைநகர் டெல்லியில் இன்று அதிகாலை நிலவிய கடும் பனிமூட்டம் காரணமாக, அங்கு விமானம், ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் சில வாரங்களாக நள்ளிரவு மற்றும் அதிகாலை வேளைகளில் கடும் பனிமூட்டம் காணப்படுகிறது. வெள்ளிக்கிழமை அதிகாலையும் இதே நிலை நீடித்தது.

காற்று மாசுடன் கடும் பனிமூட்டமும் சேர்ந்துள்ளதால், டெல்லி சர்வதேச விமான நிலையத்திலிருந்து காலை 5:30 மணி முதல் 7 மணி வரைக்குள்ளான விமானங்களின் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் ரயில்களும் டெல்லியை வந்தடைவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன ஓட்டிகள், இரவு நேரத்தைபோன்று விளக்குகளை ஒளிரவிட்டப்படியே வாகனம் ஓட்டும் நிலை நீடிக்கிறது.

இன்று காலை டெல்லி மாநகரின் குறைந்தபட்ச வெப்பநிலை 7 டிகிரி செல்சியஸாக பதிவானது. டெல்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் அடுத்த இரண்டு தினங்களுக்கு கடும் பனிப்பொழிவு இருக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP