டெக்சாஸ்: துப்பாக்கிச்சூட்டில் 2 பேர் பலி!
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கல்லூரியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
Oct 28, 2019, 17:40 IST
| டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள கல்லூரியில் மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ஏ.எம்.பல்கலைக்கழகத்தில் பார்டி நடைபெறும் பகுதியில் நேற்று மாணவர்கள் புதிய கல்வி ஆண்டை கொண்டாடுவதற்காக கூடியுள்ளனர். இந்நிலையில், கல்லூரி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர்கள் சிலர், பார்டி நடைபெற்றிருந்த நேரத்தில் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பி சென்றுள்ளனர். இதில், 2 பேர் உயிரிழந்தனர். 14 பேர் படுகாயமடைந்தனர். தப்பி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Newstm.in
newstm.in