850 ஆண்டுகள் பழமையான தேவாலயம் எரிந்து நாசம்: பிரான்ஸ் அரசு கவலை !
பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நோட்ரிடேம் தேவாலயத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், அப்பகுதி முழுவதும் நாசமடைந்ததால், அந்நாட்டு அரசு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
Apr 16, 2019, 14:15 IST
| பிரான்ஸ் நாட்டின் புகழ் பெற்ற நோட்ரிடேம் தேவாலயத்தில் நேரிட்ட பயங்கர தீ விபத்தில், அப்பகுதி முழுவதும் நாசமடைந்ததால், அந்நாட்டு அரசு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
பிரான்ஸ் தலைநகரான பாரீஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற நோட்ரிடேம் கத்தீட்ரல் தேவாலயத்திற்கு செல்லாமல் திரும்புவதில்லை. அங்கு வரும் சுற்றுலா பயணிகளை வெகுவாக ஈர்த்து வந்த சிறப்மிக்க இந்த தேவாலயம் 850 ஆண்டுகள் பழமையானது.
இந்நிலையில், இந்த தேவாலயத்தின் மேற்கூரையில் நேற்று மாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தீ விரைவாக பரவியதால், அப்பகுதி முழுவதும் தீக்கு இரையாகி நாசமடைந்தது. இந்த சம்பவத்தால் பிரான்ஸ் அரசு சோகத்தில் ஆழ்ந்துள்ளது.
newstm.in