அமெரிக்காவில் தொடர்ந்து 2வது துப்பாக்கிச்சூடு; 9 பேர் பலி
அமெரிக்காவில் இன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் இன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.
Aug 4, 2019, 21:07 IST
| அமெரிக்காவில் இன்று தொடர்ந்து இரண்டாவது முறையாக துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. அமெரிக்காவில் டெக்சாஸ் மாகாணத்தில் ஷாப்பிங் மாலில் இன்று நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 20 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் 40க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த சூழ்நிலையில், ஓஹியோவில் மதுபான பார் ஒன்றில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடைபெற்றுள்ளது. இதில், 9 பேர் பலியாகினர். 16 பேர் காயமுற்றுள்ளனர்.
இந்த இரண்டு துப்பாக்கிச்சூடு சம்பவங்களும் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த சம்பவத்தினால் அப்பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
newstm.in
newstm.in