நாடாளுமன்றம் எப்போது கூடுகிறது? -குழப்பத்தில் இலங்கை
இலங்கையின் பரபரப்பான அரசியல் சூழலில், வருகிற 7ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக சபாநாயகர் கரு ஜெயசூர்யா தெரிவித்துள்ளார்.
இலங்கையின் பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்கே உடனான கூட்டணியை முறித்து, அவரை அதிரடியாக பதவி நீக்கம் செய்த அதிபர் மைத்ரிபால சிறிசேன, ராஜபக்சேவுக்கு ஆதரவு அளித்து அவரை பிரதமராக்கினார். இந்த விவகாரம் குறித்து உலக நாடுகள் பலவும் தங்களது கருத்துக்களை கூறிவருகின்றன. இலங்கையை பொறுத்தவரை ராஜபக்சே பதவியேற்றதற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பாக அதிபர் சிறிசேன, சபாநாயகர் கரு ஜெயசூர்யாவை சந்தித்து பேசினார். இதைத்தொடர்ந்து நாடாளுமன்றம் முடக்கப்பட்டதை நீக்குவதாக அதிபர் சிறிசேன அறிவித்துள்ளார். மேலும் நவம்பர் 5ம் தேதி நாடாளுமன்ற குழுக்கூட்டம் நடைபெற உள்ளதாக அறிவித்தார்.
ஆனால் இதுகுறித்து சபாநாயகர், வருகிற 7ம் தேதி நாடாளுமன்றம் கூட உள்ளதாக அதிபர் தன்னிடம் தெரிவித்ததாக கூறியுள்ளார். இதனால் இலங்கை அரசியல் சூழலில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
newstm.in
newstm.in