Logo

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையன்று 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்தன.
 | 

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 359 ஆக அதிகரிப்பு

இலங்கை தொடர் குண்டு வெடிப்புகளில் உயிாிழந்தோா் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளது. இதில் 39 போ் வெளிநாட்டினா் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சா் ரூவன் விஜயவா்தனே தொிவித்துள்ளாா்.

இலங்கையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, ஈஸ்டர் பண்டிகையன்று 3 தேவாலயங்கள், 3 ஐந்து நட்சத்திர ஓட்டல்கள் உள்பட 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்றன. நேற்றுமுன்தினம் வெடிகுண்டுகளை செயலிழக்கச் செய்தபோது மேலும் ஒரு குண்டு வெடித்தது. 

கொழும்பு பஸ் நிலையத்திலும், சர்வதேச விமான நிலையம் அருகிலும் வெடிகுண்டுகள் கண்டு பிடிக்கப்பட்டன. அடுத்தடுத்த நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களால் நாடு முழுவதும் பீதி நிலவி வருகிறது. இந்த குண்டு வெடிப்புகளில் சிக்கி   500-க்கும் மேற்பட்டோர் பலத்த காயமடைந்தனர். 

காயமடைந்தவர்களுக்கு இலங்கையில் உள்ள வெவ்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். 

இதனால் நேற்று மாலை நிலவரப்படி, 321 பேர் பலியானதாக அறிவிக்கப்பட்டது. அதன்பின்னர், பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் சிகிச்சை பலனின்றி மேலும் பலர் உயிரிழந்தனர்.

இன்று காலை வெளியான தகவலின் படி உயிரிழப்பு 359 ஆக உயர்ந்துள்ளது. இதில் 39 போ் வெளிநாட்டினா் என அந்நாட்டு பாதுகாப்பு துறை அமைச்சா் ரூவன் விஜயவா்தனே தொிவித்துள்ளாா்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP