இலங்கையில் 108 இந்தியர்கள் கைது!
இலங்கையில் குடிவரவு சட்டத்தை மீறி குடியிருந்த 108 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் 48 பேர் இலங்கையிலேயே தங்கி தொழில் புரிந்து வருவதாகவும் இலங்கை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
May 2, 2019, 16:00 IST
| இலங்கையில் குடிவரவு சட்டத்தை மீறி குடியிருந்த 108 இந்தியர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையில் நடைபெற்ற தொடர் குண்டுவெடிப்பை தொடர்ந்து, அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சுற்றுலா விசாவில் வருகை தந்து குடிவரவு சட்டத்தை மீறி குடியிருந்தவர்களை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதில் இந்தியாவை சேர்ந்த 108 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் 48 பேர் இலங்கையிலேயே தங்கி தொழில் புரிந்து வருவதாகவும் இலங்கை போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
newstm.in
newstm.in