சியோல்: பிரதமர் மோடி - தென்கொரிய அதிபர் சந்திப்பு!
தென்கொரியா சென்றுள்ள பிரதமர் மோடி, அந்நாட்டு அதிபரை அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் (ப்ளூ ஹவுஸ்) சந்தித்துப் பேசினார்.
இரண்டு நாள் அரசு முறைப்பயணமாக பிரதமர் மோடி, தென்கொரியாவுக்கு நேற்று சென்றார். அங்கு இந்த வம்சாவளியினருடனான சந்திப்பு, பல்கலைக்கழக மாணவர்களுடன் சந்திப்பு என பல்வேறு நிகழ்ச்சிகளில் அவர் பங்கேற்றார்.
இந்த நிலையில், தலைநகர் சியோலில் உள்ள அந்த நாட்டு அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு தற்போது மோடி சென்றுள்ளார். அங்கு அவரை, தென்கொரிய அதிபர் மூன்-ஜெய், அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தின் மூதல் பெண் அதிகாரியான கிம் ஜுங்க் -ஹுக் ஆகியோர் வரவேற்றனர்.
வரவேற்புக்கு பின் இருதரப்பு உறவுகள் குறித்து இருநாட்டு தலைவர்களும் கலந்துரையாடினர்.
முன்னதாக, அதிபரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் பாரம்பரிய முறைப்படி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
newstm.in
newstm.in