ஆப்கானிஸ்தானில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலி !
ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர். பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்களும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.
Jun 9, 2019, 16:45 IST
| ஆப்கானிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் நடத்திய ஆளில்லா விமான தாக்குதலில் 2 ஐ.எஸ். பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர்.
ஆப்கானிஸ்தான் கோகியானி மாவட்டத்தில் வாஜிரோ டாங்கி என்ற பகுதியில் ஐ.எஸ். பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக அந்நாட்டு ராணுவத்துக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து அங்கு ஆளில்லா விமானம் மூலம் தாக்குதல் நடத்த ராணுவம் அதிரடியாக முடிவு செய்து, அதிரடி தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் ஐ.எஸ். பயங்கரவாதிகளின் பதுங்குமிடம் அழிக்கப்பட்டதோடு, ஐ.எஸ். பயங்கரவாதிகள் 2 பேர் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் பதுக்கி வைத்திருந்த ஏராளமான வெடிபொருட்களும், ஆயுதங்களும் அழிக்கப்பட்டன.
newstm.in