திருமகள் உள்ளம் மகிழ தினமும் இந்த துதிகளை சொல்லுங்கள்!
வீட்டில் லக்ஷ்மிகரம் நிறைந்து இருக்க ஆடம்பரமான பூஜையோ, பெரிய பெரிய மந்திரங்களோ சொல்ல வேண்டும் என்பதில்லை. நம்மால் முடிந்த எளிய பூஜைகளும், எளிய துதிகளுமே போதும். தினமும் கீழ்க்கண்ட இந்த போற்றியை 108, 1008 பூக்களை வைத்துக் கொண்டு உள்ளன்போடு சொன்னாலே போதும்,திருமகள் உள்ளம் மகிழ்ந்து நம் இல்லத்தில் இருப்பாள்.
1. சகல சித்தியளிக்கும் ஆதிலட்சுமியே போற்றி!
2. பிள்ளைப்பேறு அளிக்கும் சந்தான லட்சுமியே போற்றி!
3. ராஜமரியாதை தரும்-கஜலட்சுமியே போற்றி!
4. செல்வச் செழிப்பைத் தரும்-தனலட்சுமியே போற்றி!
5. தான்ய விருத்தியளிக்கும்-தான்யலட்சுமியே போற்றி!
6. எடுத்த காரியங்களில் எல்லாம் வெற்றியைத் தரும்-விஜயலட்சுமியே-போற்றி!
7. சவுபாக்கியங்கள் தரும்-மகாலட்சுமியே போற்றி!
8. மனதிலும், உடலிலும் சோர்வை அகற்றி தைரியத்தையும், தெம்பையும், வீரத்தையும் அருளும்-வீரலட்சுமியே போற்றி!
9. அனைத்து நன்மைகளையும் வரமாகத்தரும் வரலட்சுமியே போற்றி! போற்றி!!
newstm.in