Logo

ஆன்மீக செய்தி – நீரில் செய்யக் கூடாதது

பிரயாணங்களின் போது,ஆற்றில் குளிக்க நேர்ந்தால்,ஆற்றுநீரை வாயில் எடுத்து, ஆற்றிலேயே உமிழக்கூடாது. நீர் மொண்டு கரைக்கு வந்து வெளியே தான் உமிழ வேண்டும். ஆறுகள் நம் தாகம் தீர்க்கும் தேவதைகளாக வணங்கப்படுவதால், அவற்றின் உருவம் மற்றும் ஓடும் நீர் குறித்து பரிகாசம் செய்வது பாவமாக கருதப்படுகிறது.
 | 

ஆன்மீக செய்தி – நீரில் செய்யக் கூடாதது

பிரயாணங்களின் போது,ஆற்றில் குளிக்க நேர்ந்தால்,ஆற்றுநீரை வாயில் எடுத்து, ஆற்றிலேயே உமிழக்கூடாது. நீர் மொண்டு கரைக்கு வந்து வெளியே தான் உமிழ வேண்டும். 

ஆறுகள் நம் தாகம் தீர்க்கும்  தேவதைகளாக வணங்கப்படுவதால், அவற்றின் உருவம் மற்றும் ஓடும் நீர் குறித்து பரிகாசம் செய்வது பாவமாக கருதப்படுகிறது.

இரவில் ஆறு, அருவிகளில் நீராடக் கூடாது.குறிப்பாக கிணறுகளில் இரவு நேரத்தில் தோண்டி, வாளிகளை உள்ளே போட்டு நீர் இறைக்கக்கூடாது. இவ்வாறு செய்தால் இரவில் உறங்கும் நதிதேவதைகளை எழுப்புவதாக அர்த்தம். 

காலில் நேரடியாக தண்ணீர் ஊற்றி கழுவக்கூடாது. தண்ணீரை முகந்து கை வழியே வழியவிட்டு தான் கால் கழுவ வேண்டும். ஏனெனில், தண்ணீரில் வருணன் இருக்கிறான். அவனை நேரடியாக காலில் போட்டு மிதிக்கக்கூடாது என்பது ஐதீகம்.

காலைத் தேய்த்துக் கழுவ கைகளையே பயன்படுத்த வேண்டும். ஒரு காலை மற்றொரு காலால் தேய்த்தால், அவ்விடத்தை விட்டு லட்சுமி புறப்பட்டு போய்விடுவாள். அவளுக்கு இந்தச் செயல் பிடிக்கவே பிடிக்காது.

உடலில் சிறிதளவேனும் துணி இல்லாமல் குளிக்கக்கூடாது என்கிறது நமது மத தர்மம். இதன் காரணமாக தான் குழந்தைகளுக்கு கூட அரைஞாண் கயிறைக் கட்டி விடுகிறோம்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP