Logo

மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து !

மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.
 | 

மணிரத்னம் மீதான தேசத்துரோக வழக்கு ரத்து !

கடந்த கடந்த ஜூலை மாதம்  'பசு வதை தடுப்பு' என்னும் போர்வையில் அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை  தடுக்கும்  வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி திரைத்துறையை சேர்ந்த பிரபலங்களான  மணி ரத்னம், அபர்னா சென், ராம்சந்திர குஹா உள்ளிட்ட 49 பேர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் பரவியது. இந்த தகவலை  மணிரத்னம் மறுத்திருந்தார்.

இந்த கடிதத்தை எதிர்த்து பீகாரை  சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் பொதுநலவழக்கு பதிந்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் மணிரத்னம் உட்பட இந்த கடிதத்தை எழுதியவர்கள் அனைவர் மீதும் தேசதுரோக வழக்கு பதிவு செய்ய உத்தரவு பிறப்பித்திருந்தது . இந்நிலையில்  மணிரத்னம், ரேவதி உள்ளிட்ட 49 பிரபலங்கள் மீது தேசத்துரோகம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்கை பீகார் போலீசார் நேற்று ரத்து செய்தனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP