சிவகார்த்திகேயன் எழுதிய பாடலுக்காக நன்றி தெரிவித்தார் ’கோலமாவு கோகிலா’ பட இயக்குனர்: எந்த பாடல் தெரியுமா?
நயன்தாராவின் நடிப்பில் கடந்த 2018ல் வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் கோலமாவு கோகிலா. நெல்சன் திலீப்குமார் இயத்தில் உருவாகியிருந்த இந்த படத்தில் நடிகர் யோகி பாபு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார்.
சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருந்தார். மேலும் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே பலத்த வரவேற்பை பெற்றது "கல்யாண வயசுதான்" என்னும் பாடல். இந்த பாடலுக்குரிய வரிகளை நடிகர் சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார்.
படம் வெளியாகி ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், கல்யாண வயசுதான் பாடலுக்காக சிவகார்த்திகேயனுக்கு நன்றி கூறியுள்ளார் நெல்சன் திலீப்குமார்.
Anything for u my dear brother🤗🤗🤗Melum pala vetri padangal thara Vazhthukkal😊👍 https://t.co/ch2c4OVPqA
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) August 17, 2019
newstm.in
newstm.in